search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வட்டாரத்தில் மண் பரிசோதனை சோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    பரமத்தி வட்டாரத்தில் மண் பரிசோதனை சோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

    • வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.

    மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரண மாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகி றது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறை களை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாது காப்பதோடு, பயிர் விளைச் சலையும் அதிகரிக்கலாம். இதற்கு ஒரே வழி மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதே ஆகும்.

    எப்படி எடுக்கலாம்?

    மாதிரி எடுக்கும் ஆழம் புல் மற்றும் புல்வெளி 2 அங்குலத்தில் 5 செ.மீ, நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சில தானியப் பயிர்கள் 6 அங்குலம் 15 செ.மீ, பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் 9 அங்குலம் 22 செ.மீ, நிரந்தரப்பயிர்கள் , மழைப்பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 12, 24, 36 அங்குல ஆழங்களில் 3 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். 30, 60, 90 செ.மீ ஆழங்களில் 3 மண் மாதிரி களை எடுக்க வேண்டும்.

    மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும், குறுக் கும் , நெடுக்கமாக நடந்து அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, மண்ணின் நிறம், நயம், மேலாண்மைமுறை பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல் பல பகுதி களாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தனித்தனி யாக மண்மாதிரி சேகரிக்க வேண்டும். முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய எரு மற்றும் குப்பை உரங்கள் பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மாதி ரிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயலின் வரப்பு பகுதிகள், வாய்க் கால்கள், மரத்தடி நிழல், உரக்குழிகள், கிணற்றுப் பகுதி இவற்றிலும் மண்மாதிரி எடுக்கக்கூடாது.

    அதிகபட்சமாக 5 ஹெக்ட ருக்கு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் ஹெக்டேருக்கு ஒரு மாதிரி யும் தயாரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்கலாம். உர மிட்டவுடன் சேகரிக்கக்கூ டாது. குறைந் தது 3 மாதம் இடை வெளி தேவை. பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. மண்மாதிரி எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், கற்கள் போன்ற வற்றை முறையாக வயல்மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

    மண்வெட்டி கூடாது

    மண் மாதிரி எடுக்கும் போது ஆங்கில எழுத்து வி போல் மண்வெட்டியால் இரு புறமும் வெட்டி அவ்விடத்தில் உட்புற மண்ணை நீக்கிவிட வேண்டும். பின்பு வி யின் இருபுற மும் 15 செ.மீ அளவு கரண்டி மண்மாதிரி சேக ரிக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஹெக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதி ரிகள் சேகரிக்கவேண்டும். ஈரமான மண்மாதிரிகளாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்தவேண்டும். நுண்ணூட்டங்கள் அறிய வேண்டும் என்றால் எவர் சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் மண்மாதிரி களை எடுத்து பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி மற்றும் இரும்புச் சட்டிகளை பயன்படுத்தக் கூடாது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒரு பிளாஸ் டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண்மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும். மண்ணை சுத்த மான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி அதை 4 ஆக பிரித்து அரை கிலோ அளவு வரும்வரை திரும்ப திரும்ப கையாளவேண்டும்.

    மேற்கூறப்பட்ட வழி முறைகளை பின்பற்றி விவ சாயிகள் மண் மாதிரிகள் எடுத்து கொடுத்து அன்றே பரிசோதனை முடிவுகளை யும் பெற்றுப் பயனடைய கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    Next Story
    ×