search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

    • கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.
    • இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக, 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட, கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

    விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவ ரங்களைப் பெற, நாமக்கல் வேளாண்மைப் பொறி யியல் துறை வேளாண்மை விரிவாக்க மைய உதவி செயற்பொறியாளர், திருச்செங்கோடு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறி யாளர் ஆகியோரை அணு கலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×