search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×