

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி செயல் திட்டத்தை வருகிற மே 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள 7 நகராட்சி பள்ளிகளுக்கு உணவு தயாரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள இடத்தை சமையல் கூடமாக மாற்றுவதற்கு போதுமானதாக உள்ளதா என நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கமிஷனர் (பொறுப்பு) அரிகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இடங்களை போதுமானதாக இருக்குமா ,உணவு செய்து மற்ற நகராட்சி பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் செல்லும் பாதை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது நகராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி கந்தன், இளைஞர் அணி சரவணன், அப்பகுதியைச் சேர்ந்த கந்தன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.