search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி, வெண்ணாற்றில் உள்ள மண் மேடுகள் முட்செடிகளை அகற்ற வேண்டும்
    X

    விண்ணமங்கலம் வெண்ணாற்றில் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள நெய்வேலி காட்டாமணக்கு செடிகள்

    காவிரி, வெண்ணாற்றில் உள்ள மண் மேடுகள் முட்செடிகளை அகற்ற வேண்டும்

    • காவேரி , வெண்ணாறு என இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் உள்ளது.
    • நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணிகளுக்காக ரூ20.45 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை கண்காணிக்க மேலாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன

    பிரதான வாய்க்கால்கள் அதிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதால் வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் சீராக சென்று சேரும் என்றும், பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைந்து வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காவேரி , வெண்ணாறு ஆகியவை இயற்கையாக அமைந்த ஆறுகள் என்பதால் இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் அமைந்துள்ளன. கல்லணை அருகில் புதூர்,சுக்காம்பார், கோவிலடி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில்நடுவில் நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

    கல்லணையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பகுதியில் மண்மேடிட்டு காடுகள்போல வளர்ந்து உள்ள பகுதிகளில் செல்ல இயலாது,

    காவிரி கரை ஓரத்தில் தண்ணீர் ஓடும் நிலை உள்ளது.இதைப்போலவே வெண்ணாற்றில் அடப்பன்பள்ளம் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் அருகே 2கிலோமீட்டர் தூரத்திற்கு மண் மேடிட்டு ஆற்றின் நடுவே மரம் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.

    வெண்ணாற்றில் விண்ணமங்கலம் பாலத்தின் பகுதியில் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் பரந்து வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளது.தற்போதுள்ள சூழலில் கல்லணை தலைப்பு பகுதியில் காவிரி மற்றும் வெண்ணாற்றில் நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் குறுங் காடுகள் மற்றும் மண்மேடு களை அகற்றி சீரான நீரோட்டத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×