search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சியில்  மகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை முயற்சி
    X

    கல்லிடைக்குறிச்சியில் மகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை முயற்சி

    • மாரி விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • 2 பேரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பன். இவரது மனைவி மாரி (வயது 33). இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    இந்நிலையில் மாரி நேற்று இரவு தனது மகள் பேச்சியம்மாளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×