தென்காசி மாவட்டத்திற்கு 5-ந் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிய போது எடுத்தபடம். அருகில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உள்ளனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிய போது எடுத்தபடம். அருகில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உள்ளனர்.
Published on

தென்காசி:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி வருகிறார்.

ஆலோசனை கூட்டம்

அவரது வரவேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோ சனை கூட்டம் தென்காசி ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் தென்காசி தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்திற்கு முதல்முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவழைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுக்கு பாராட்டுவது, தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தர சம்மதித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் திரளான தொ ண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொகுதிக்கு 250 என்று 3 தொகுதிகளுக்கு 750 பேருக்கு பொற்கிழி வழங்கு வது, இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்குமான நம்பர் 1 முதல்-அமைச்சராக செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தென்காசி மாவட்டம் சார்பில் சேலத்தில் நடை பெற உள்ள இளை ஞரணி மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஜேசுராஜன், ஆறுமுகசாமி, ஷேக்தாவுது, முத்துப்பா ண்டி, மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரீப், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ண ராஜா, முன்னாள் அமை ச்சர் தங்கவேலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் ராஜா, நகரச் செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், வெங்க டேஷ், மாவட்ட துணை செயலா ளர்கள் கென்னடி, கனிமொழி தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகு சுந்தரம், மகேஷ் மாயவன், சிவன் பாண்டி யன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே. ரமேஷ், கனகராஜ் முத்து பாண்டியன், ஐவேந்திரன் தினேஷ், ஆறுமுகசாமி, சங்கரநயினார், பேரூர் செயலாளர்கள் முத்தையா சுடலை, பண்டாரம், குட்டி சிதம்பரம், நாகராஜன், தங்கப்பா, நெல்சன், லெட்சுமணன், அழகேசன், வளன் அரசு, இஞ்சி இஸ்மாயில், செல்வகுமார், கோமதிநாயகம், மகளிர் அணி திவ்யா மணிகண்டன், சங்கீதா, மகளிர் அணி நிஷா, பொன் செல்வன், சாம்பவர்வடகரை மாறன், தொண்டரணி அமை ப்பாளர் இசக்கி பாண்டி யன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் சரவணார், வக்கீல் அணி வேலுச்சாமி, ரகுமான் சாதத், முத்துக்குமாரசாமி, சுரண்டை சுதன், வார்டு செயலாளர் ராமராஜ், கிளைச் செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com