search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம், பொங்கலூர்   பகுதியில் 1-ந்தேதி  திட்டப்பணிகள் தொடக்க விழா அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கிறார்
    X

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

    பல்லடம், பொங்கலூர் பகுதியில் 1-ந்தேதி திட்டப்பணிகள் தொடக்க விழா அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கிறார்

    • திட்டப்பணிகளையும் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
    • முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் வருகிற 1-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    அன்று காலை 10 மணிக்கு பொங்கலூர் கிழக்கு ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 6 திட்டப்பணிகளையும், காலை 10.30 மணிக்கு பொங்கலூர் மேற்கு ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5 திட்டப்பணிகளையும் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

    காலை 11.30 மணிக்கு பல்லடம் மேற்கு ஒன்றியம் மாணிக்காபுரத்தில் ரூ.4 கோடியே 85 லட்சம் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 9 திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    மதியம் 12 மணிக்கு பல்லடம் கிழக்கு ஒன்றியம் கரைப்புதூரில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 6 திட்ட பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.

    Next Story
    ×