search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு- கல்லணையில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
    X

    ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு- கல்லணையில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

    • கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ந்தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கல்லணை பாலங்களின் மேல் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணையில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்றின் தலைப்பில் காவிரி ஆற்றில் நீரொழுங்கி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×