

சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில், நகராட்சி ஆணையர் இப்ராகிம், மேலாளர்காதர் கான், பணி மேற் பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு
ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், சுகாதார அலுவலர் செல்லதுரை, மற்றும் அலுவலர்கள் ,பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.