சிவகிரி அருகே மனுநீதி முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூ.10.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.
முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

சிவகிரி:

சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக் கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். முகாமில் 86 பயனா ளிகளுக்கு ரூ.10.98 லட்சம் மதிப்பிலான நலத்தி ட்ட உதவிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போ ம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்களை சிறப்பாக செய ல்படுத்தி பொது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சிவகிரி வட்டம் கூடலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தங்களது கிராம த்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வில் முன்னேற தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவி களை கேட்டறிந்து பயன் பெற வேண்டும் என்றார்.

முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்கா ட்சியினையும், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் அமை க்கப்பட்டிருந்த கண்காட்சி யினையும் மாவட்ட கலெக்டர் மற்றும் ஏராள மான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திர லீலா, சங்குபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அருணா, கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com