அழுகிய நிலையில் ஆண் பிணம்

பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

பவானி:

பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உடன் அலுவலரை அழைத்து கொண்டு சம்பவ இடம் சென்று பார்த்த போது புளு, பச்சை, கலரில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுடன் ஆண் பிணம் இருந்தது.

மேலும் பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com