எம்பிராயிடிங்கில் பல்வேறு வடிவங்களில் இதயத்தை வரைந்து பெண்கள் சாதனை

எம்பிராயிடிங்கில் பல்வேறு வடிவங்களில் இதயத்தை வரைந்து பெண்கள் சாதனை படைத்தனர்.ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.
உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நோபிள் உலக சாதனை புத்தகம் சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்பிராயிடிங்கில் இதயத்தை வரைந்து அதன் நடுப்பகுதியில் பல்வேறு விதமான டிசைன்களை எம்பிராய்டிங் செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் மதுரை, திருமங்க லம், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த 10 வயது முதல் 60 வயது வரையிலான 100 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு போட்டி நேரமாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு 'ஆரி வொர்க்' மூலமாக இதயம் வரைந்து மற்றும் அதன் நடுவே பல்வேறு வடிவங்களில் வரைய வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.

அதில் இதயம் தொடர் பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்ற விதிமுறை யில் உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.39 மணிக்கு போட்டி தொடங்கி யது. நடுவர்களாக டாக்டர் அரவிந்த், ஹேமநாத் இருந்து சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்குள் அனைத்து போட்டியாளர்க ளும் உலக சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்த னர். இவர்களில் முதல் 10 இடம் பெற்ற பெண்களுக்கு சிறப்பு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட 100 பெண்களும் முதல்முறை யாக உலகசாதனை நிகழ்ச் சியை 1 மணி நேரத்திற்குள் முடித்ததால் இவர்கள் அனைவரின் சாதனையும் நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப் பட்டது. போட்டி ஏற்பாடு களை சிற்பி ஆரி எம்பிரா யிடிங் தலைவர் ராஜ ராஜேஸ்வரி, ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com