search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேர் கைது
    X

    கைதான அஜய்குமார், ஜீவமணி

    வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேர் கைது

    • மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் நேற்று இரவு சிம்மக்கல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 730-ஐ பறித்து சென்றனர். இதுபற்றி மாடசாமி திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனைபேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே ஆரப்பாளையம், மஞ்சள்மேடு காலனியில் பிச்சை (47) என்பவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து படுகாயங்களுடன் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் என் மகனை இதே பகுதியில் வசிக்கும் 2 பேர் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். இதன் காரணமாக அவர்களுக்கும் எனக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நான் நேற்று இரவு மஞ்சள்மேடு காலனியில் நடந்து சென்றேன்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை கத்தியால் குத்திவிட்டு, உருட்டுக்கட்டையால் தாக்கினர் என்று கூறினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் திலகர் திடல், கரிமேடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் இடம்பெற்று இருந்த காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கண்மாய்க்கரை, சகாயமாதா தெருவைச் சேர்ந்த அஜய்குமார் என்ற குட்டி சாக்கு (23), ஆரப்பாளையம், அன்னை இந்திரா நகர், மலையாளம் மகன் ஜீவமணி என்ற தீப்தி (20) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாடசாமியிடம் பணம் பறித்தது, பிச்சையை கத்தியால் குத்தியது நாங்கள் தான் என்று தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து திலகர் திடல் போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×