search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் திருட்டு: 30 பவுன்- ரூ.8 லட்சம் மீட்பு
    X

    பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் மற்றும் கைதான பாண்டியராஜன்.

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் திருட்டு: 30 பவுன்- ரூ.8 லட்சம் மீட்பு

    • மதுரையில் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தான் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை வசந்தநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன். சமையல் காண்டிராக்டராகன இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் திருடிவிட்டு தப்பினர்.

    இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்ேபாது 2 பேர் நள்ளிரவில் சீனிவாச சங்கர நாராயணன் வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 26-ந் தேதி ஆண்டாள்புரம் பகுதியில் நரேந்திரன் என்பவரது வீட்டில் கேமரா செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    போலீசார் கேமிராவில் பதிவான 2 பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அதில் ஒருவர் மதுரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி கணபதி மகன் பாண்டியராஜன் (வயது 22) ஆவார். இவர் மீது அடிதடி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் மதுரை நகர் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து போலீசார் பாண்டியராஜன் வீட்டில் சென்று அவரை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தியதில் தனது கூட்டாளி கணேசன் என்பவருடன் சேர்ந்து அவர் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருடியுள்ளார்.

    அவரிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதம் 10 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் கணேசன் எடுத்து சென்றுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை நடந்த 13 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×