search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்
    X

    உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்

    • கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், தாசில்தாரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன்.

    இவர் பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாறு பட்டாமாறு தலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பமிட சீமானூத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவிடம் நவநீதன் அளித்துள்ளார்.

    முறையான விசாரணை செய்யாமல் கையெழுத்திட முடியாது என கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நவநீதன் தொலைபேசி மூலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொடர்பு கொண்ட போது அவரது மனைவி தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொலை செய்து விடுவேன் என்று நவநீதன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலி ங்கத்திடம் புகார் செய்யப் பட்டது. அதன் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரிலும், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கர லிங்கம் பரிந்து ரைப்படியும், உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளரும், தாசில்தார் வாகன ஓட்டுநருமான நவநீதனை பணியிடை நீக்கம் செய்து உசிலம்பட்டி தாசில்தார் கருப் பையா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×