search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
    • www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1.8.2022 முதல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் விரும்பும்பட்சத்தில் தங்களது ஆதார் எண்ணைகீழ்க்கண்ட வழிமுறைகளில் வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்துக்கொள்ளலாம்.

    அதற்காக www.nvsp.in என்றஇணை யதளம் மூலமாகவும், Voter Helpline கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்தும், www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்கா ளர்களின் இல்லங்க ளுக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணைபெற்று இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் 68 அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் நாளை(4-ந் தேதி) மற்றும் 5-ந் தேதி ஆகிய 2 தினங்கள் காலை 10 மணிமுதல்மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்டவாக்குச் சாவடி மையங்களில் நடைபெறஉள்ளது.

    பொதுமக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைஎண் விபர ங்களுடன் தொடர்பு டைய வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி நிலைஅலுவலரிடம் படிவம் 6பி பூர்த்தி செய்தோ அல்லது இணையவழியிலோ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×