

சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் முன்னிலையில் யாக பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.