என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்
    X

    ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
    • தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னை கூடுதல் டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து இலவச தொலைபேசி எண் 1800 599 5950 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    Next Story
    ×