search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் பிறந்தநாள் விழா
    X

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பெரியார் பிறந்தநாள் விழா

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப் பன்பட்டியில் பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் பெரி யாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில விவ சாய அணி இணை செயலா ளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், தனசேகரன், பேரூர் செயலாளர் வருசை முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வில்லூர் ஞானசேகரன், பரமசிவம், வழக்கறிஞர் அணி அமைப் பாளர் ஆனந்த், கீழக்குயில் குடி செல்வேந்திரன், திரு மங்கலம் நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×