பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.
பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
Published on

சோழவந்தான்

மன்னாடிமங்கலம் பாம்பலம்மன் கோவில் 58-வது முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதை யொட்டி கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

முதல் நாள் முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை பா.ஜனதா விவசாய அணி மாநில துணை தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டி யன் ஆகியோர் தலைமையில் முளைப்பாரிக்கு முத்து பரப்பினார்கள்.

மாலை உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி னர். தினசரி அன்னதானம் வழங்கப்பட்டது. 8-ம் நாள் அம்மனுக்கு பூ அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை பூசாரி வீரசேகர் சக்தி கரகம் எடுத்து வந்தார். 9-வது நாள் காலை பால்குடம், அக்னிசட்டி பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை அம்மன் சிலை ஊர்வலத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

10-ம் நாள் காலையில் முளைப்பாரி கரைத்தல், மாலையில் தெய்வீக வேடங்கள் அணிந்து வண்டி வேஷம் நடந்தது. தினசரி கலை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ஆறுமுகம், கணேசன், ஒன்றிய கவுன் சிலர் ரேகா வீரபாண்டி, நிர்வாகிகள் செந்தில்மயில் ஆனந்தகுமார், கண்ணன், ராஜபாண்டி, கார்த்திக்ரவி உட்பட ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

விழா கமிட்டினர், கிராம பொதுமக்கள், பாம்பலம்மன் கோவில் நண்பர்கள் ஆகி யோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com