search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை
    X

    சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

    புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை

    • திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியால் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நடுக்கோட்டை கிராமத்தில் பொதுநிதியில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சுகுழாய் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலமாக நடுக்கோட்டை ஊராட்சி கீரியகவுண்டபட்டி காலனியில் இருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் கழிவு நீர் இந்த புதிய உறிஞ்சுகுழாயில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நடுக்கோட்டை மைக்குடி அருகே கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலக்கோட்டையில் இருந்து பாரபத்தி வரையில் செல்லும் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டி னை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது 5 மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோடு 7 மீட்டராக அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி யுள்ளனர். இதன் மூலமாக வாகன போக்குவரத்து மைக்குடி விலக்கில் இருந்து கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோ ட்டை விலக்கு வரையில் சாலை பணிகள் தொடங்கி யுள்ளன.

    முதற்கட்டமாக தற்போது கீழக்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இந்த பணி அடுத்துள்ள நடுக்கோட்டை பஞ்சாயத்து எல்லையில் நடைபெறும். அப்போது புதியதாக நடுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் அருகே சாலைபணி நடைபெறும் உள்ளதால் உறிஞ்சுகுழாய் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுநிதி ரூ. 1 ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர் சுந்தரவடிவே லுவிடம் கேட்ட போது சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என நாங்கள் ஏற்கனவே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நடுக்கோட்டை ஊராட்சியில் தகவல் கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சாலை அகலப்படுத்தும் இடத்தில் உறிஞ்சுகுழாய் அமைத்துள்ளனர். அதன்மீது தான் சாலை அகலப்படுத்தும் பணிகள் செல்லும் என்றார்.

    கீழக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில் இரண்டு துறை அதிகாரிகளும் முதலிலேயே கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்கி இருக்கலாம். தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×