search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
    • கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத் திற்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப் பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தமிழரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, தொழு நோய், காசநோய், பல், கண், பொதுமருத்துவம், இருதயம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோத னைகள், எலும்பு மூட்டு, எய்ட்ஸ் பரிசோ தனை, பெண்கள் குழந்தை களுக்கான பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் ராமச்சந்தி ரன், சிந்தனா, ஹசைனா, பிரியா, சாந்தினி, பிருந்தா வசந்ந்,அபிநயா, மோனிஷா, சாந்தினி, குழுவினர்கள் நோயாளிகளை பரிசோ தனை செய்தனர். முகாமில்

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் நாகஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன், கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×