search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெப்பத்தில் 3 முறை வலம் வந்து அருள்பாலித்த முருகப்பெருமான்-தெய்வானை
    X

    திருப்பரங்குன்றத்தில் தெப்ப திருவிழா நடந்த காட்சி.

    தெப்பத்தில் 3 முறை வலம் வந்து அருள்பாலித்த முருகப்பெருமான்-தெய்வானை

    • திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்தில் 3 முறை வலம் வந்து முருகப்பெருமான்-தெய்வானை அருள்பாலித்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் வைர தேரோட்டம் நடைபெற்றது.


    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்.


    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் சன்னதி யில் சுப்பிர மணியசுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி னார். பின்னர் சன்னதி தெரு வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளினர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத் தேரில்(மிதவை)தெய்வானை யுடன், சுப்பிரமணியசுவாமி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இன்று இரவு மின் ஒளியில் தெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அப்போது வான வேடி க்கைகளும் இசை கச்சேரி களும் நடை பெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வருவார். அப்போது சன்னதி தெருவில் உள்ள சொக்க நாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×