search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம்
    X

    கூட்டத்தில் புதிய உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம்

    • மதுரையில் புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் புதிய உரங்கள் தயாரிப்பு குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.

    மதுரை மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜீவா சிறப்புரையாற்றினார்.

    இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான விவசாயி களுக்கு டான்பெட் உரம் தயாரிப்பு குறித்தும், இதன் பயன்பாடு, உரமிடும் முறை குறித்தும், உயிர் உரங்கள், உயிர்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், மண்புழு உரம் மற்றும் நெல்விதைகள் குறித்தும் துணைப் பதிவாள ரும், மண்டல மேலாளருமான பார்த்திபன் விளக்கினார்.

    இதில் மதுரை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் அமிர்தா, துணைப்பதிவாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது டான்பெட்டின் புதிய தயாரிப்புகள் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னி லையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

    Next Story
    ×