search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
    X

    கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர்கள் தூவினார்.

    விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

    • மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
    • பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தொகுதியில் உரப்பனூர், வாகைக்குளம் கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பின.இதன் காரணமாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்த அரசு பயிர் காப்பீடு நிவாரணத்தை முழுமையாக பெற்று தர வேண்டும்.

    எடப்பாடி ஆட்சி காலத்தில் 4 ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பெற்று தரப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 7000 ரூபாய் அதிகபட்சமாக அதற்கேற்ற வகையில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஈடுபொருள் மானியமும் வழங்கப்பட்டது.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய மானிய தொகை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×