search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
    X

    புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

    • ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது.
    • கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 88-வது வார்டு அனுப்பானடி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாக ராஜன், மண்டல தலை வர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சி லர்கள் சோலை ராஜா, பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், செல்வம், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், 88-வது வார்டு வட்ட செயலாளர் தாமோதரன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×