search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமசபை கூட்டம்
    X

    கிராமசபை கூட்டம்

    • சோழவந்தான் பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தது. திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் மாலிக், பற்றாளர் சுஜாதா முன்னிலை வகித்தனர். செயலர் வேலன் அறிக்கை வாசித்தார். திருவேடகம் ஊராட்சி தலைவர் பஞ்வர்ணம் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார். சுதாபிரியா அறிக்கை வாசித்தார். காடுபட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பிரதாப், பற்றாளர் வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலர் ஒய்யணன் அறிக்கை வாசித்தார்.

    தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன்முருகன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பாக்கியம், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, பற்றாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். செயலர் முணியாண்டி அறிக்கை வாசித்தார். இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலர் காசிலிங்கம் அறிக்கை வாசித்தார்.

    ரிஷபம் ஊராட்சியில் தலைவர் மணி என்ற சிறுமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் நாகராஜ், துணை தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தனர். எழுத்தர் முத்துவேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் இஞ்சி தேவர் பற்றாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். செயலர் ரேவதி அறிக்கை வாசித்தார்.

    முள்ளிபள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார். செயலர் மனோபாரதி அறிக்கை வாசித்தார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    Next Story
    ×