மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை அருகே மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள தெற்கு மின் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுப்பிரமணியபுரம் ஆரப்பாளையம் தமிழ் சங்கம் ரோடு, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மஹால், அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.

இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com