search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினார்.

    தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தி.மு.க. சார்பில் பாக முகவர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தேர்தலில் கிளைச் செய லாளராக இருப்பவர்கள் பாக முகவர்தான். உங்கள் பணி மிகவும் முக்கியமானது. நமது பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர். அதை சரியாக கணக்கெடுக்க வேண்டும். பாக முகவர்கள் தான் தேர்தலின் அடித்தளம் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்து அதை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

    கிராமம், கிராமமாக சென்று திண்ணை பிரசாரம் செய்து அ.தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறி யடிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணிகளை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனை தாங்கள் கொண்டு வந்ததாக

    அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.

    அதனை முறியடிக்க வேண்டும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் அமைய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் தற்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் தொகுதி யாக தொண்டர்கள் அனை வரும் பாடுபட வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முத்துராமன் மகிழன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அணி அமைப்பாளர்கள் கொடி சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, நாகராஜ், மதன்குமார், பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வருசை முகமது, திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×