பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
Published on

மதுரை

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் ஓந்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் மாசி திருவிழா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பூக்குழி இறங்குதல், கரகம் ஜோடித்து முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரகம் ஜோடித்து, முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் சண்முகமூர்த்தி, செயலாளர்கள் தர்ம லிங்கம், பழனிக்குமார், முருகேசன், ஜெயபாண்டி மற்றும் பிள்ளைமார் சமூக பங்காளிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றில் மிதந்து வந்த பெட்டியில் இருந்த தெய்வ சிலையை ஒரு சமூகத்தை சேர்ந்த பங்காளிகள் இணைந்து ஆற்றின் மேற்கே பிரதிஷ்டை செய்து சிறு கோவிலாக கட்டி குலதெய்வ வழிபாடாக மாசி சிவராத்திரியில் பேரூராட்சி தலைவர், காவல் துறை மற்றும் அனைத்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

2015-ம் ஆண்டு கோவிலை சீரமைத்து பெரிய அளவில் கோவில் அமைத்து தற்போது வருடாவருடம் மாசி சிவராத்திரி அன்று பெரிய திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை அன்று பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கி கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com