search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

    • ஒரே பாட திட்ட முறையை கைவிட கோரி மதுரையில் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    • துணை தலைவர் முன்னிலை வகித்தார்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று உண்ணா விரத போராட்டம் நடந்தது. தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முன்னிலை வகித்தார்.

    மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கும். மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த இது வலிவகுக்கும். தமிழ் நாட்டின் உயர்கல்வியை பாதிக்கும் இந்த பொது பாடத்திட்ட முறையை திரும்ப பெற வேண்டும்.

    உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் இணை பேராசிரியர் பணி மேம்பாடு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். பேராசிரியர் பதவி உயர்வுக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற விதியில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×