search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடக்கம்

    • மதுரையில் கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நிகழ்ச்சியாக கூட்டுறவு கொடி ஏற்று விழா மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சின்ன உடப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.

    விழாவில் உறுதிமொழியை கூட்டுறவுத்துறையயைச் கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது. இதை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

    Next Story
    ×