search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்
    X

    பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்

    • வருகிற 15-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு. க.ஸ்டா லின் பங்கேற்று மாணவ -மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நாளை மாலை திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் (15-ந் தேதி) காலை 7 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து நெல் பேட்டையில் அமைக்கப்ப ட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை பார்வையிடுகிறார்.

    பின்னர் கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்ப ள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரைக்கு வரும் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (16-ந்தேதி) மதுரை கோர்ட்யார்டு ஓட்டலில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின்னர் விமானநிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×