வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல்

வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல் நடந்தது. அவர்கள் ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெரு, வெங்கடேசன் (44), திலகர் தெரு ரவிக்குமார் (54), திடீர் நகர் ஆனந்த் (38), நேரு தெரு ரமேஷ் (44) என்பது தெரிய வந்தது.
வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல்
Published on

மதுரை

மதுரை மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் நேற்று இரவு ராமையா தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று மது அருந்தினார். அப்போது அவருக்கும், அங்கு இருந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல், மணிகண்டனை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெரு, வெங்கடேசன் (44), திலகர் தெரு ரவிக்குமார் (54), திடீர் நகர் ஆனந்த் (38), நேரு தெரு ரமேஷ் (44) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையில் மணிகண்டனை பீர் பாட்டிலால் தாக்கியதாக, மேற்கண்ட 4 பேரையும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com