search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கம்

    • மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரெயில் திரு நெல்வேலியில் இருந்து பய ணத்தை துவக்கி திருநெல்வே லியில் முடிக்கும்.

    ஆனால் இந்த சிறப்பு ரெயில் சென்னை எழும்பூ ரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பய ணத்தை முடிக்கிறது. இதன்படி (நவம்பர் 9) நாளை சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூ ரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் திரு நெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திரு நெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும் பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    Next Story
    ×