என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் பெண்கள் மாயம்
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயமானார்கள்.
- இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலஅண்ணாதோப்பு பாண்டித்தெரு காம்பவுண்டை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பவித்ரா(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பவித்ராவிற்கும், அவரது வீட்டு மாடியில் வசிக்கும் வாலிபர் சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த இரு குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். அதன் பிறகு பவித்ராவிற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மாடி வீட்டில் வசித்த சரவணகுமாரையும் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அரசரடி முனிசிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்(44). வாடிப்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீனாட்சி, தனியார் நிறுவனத்திற்காக சர்வே பணிக்கு சென்று வந்தார். மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் மோகன் வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை வீடு திரும்பிய மோகன், மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்