search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்களை தாக்கி 8 பவுன் நகைபறிப்பு
    X

    2 பெண்களை தாக்கி 8 பவுன் நகைபறிப்பு

    • திருமங்கலம் அருகே 2 பெண்களை தாக்கி 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள புங்கங்குளத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி சுந்தரவள்ளி(வயது 49). இவர்கள் கிராமத்தில் சித்தாலை செல்லும் ரோட் டில் ஒத்தவீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 1 மணியளவில் சுந்தரவள்ளி வீட்டின் முன்பு அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்.

    அப்போதுஅந்த வழியாக திருமங்கலம் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி தெய்வகனி (25), டூவிலரில் சென்றார். ஆள்நடமாட்டம் அற்ற அந்த ரோட்டில் அவரை பின் தொடர்ந்து வேகமாக மற்றொரு டூவிலரில் வந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வகனி கழுத்திலிருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளான்.

    அவர் சப்தம் போடவே வீட்டிலிருந்த சுந்தரவள்ளி வெளியேஓடி வந்த நகைபறித்தவனை தடுக்க முயலவே ஆத்திரமடைந்த அந்த நபர் சுந்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகையையும் பறித்து கொண்டு மொத்தம் 8 பவு னுடன் தப்பியோடிவிட்டார்.

    நகை பறித்துச் சென்றவன் ஹெல்மெட் அணிந்து வந்தால் அடையாளம் தெரிய வில்லை. இதுகுறித்து சுந்தரவள்ளி கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குபதிவு செய்து இரண்டு பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×