

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டு ஆலை அரவையை தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் 33-வது நாளாக நடைபெற்று வருகிறது.
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தைப் பொங்கல் திருநாளான நேற்றும் விவசாயிகள் ஆலை முன்பு பொங்கலிட்டு சமையல் செய்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகள், பெரிய ஊர்சேரி, வலசை, 15.பி. மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள், பெண் கள் கலந்து கொண்டுள் ளனர்.