search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    முகாமினை கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே . பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.


    கடையம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே . பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து ,சினை பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது. ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கப்பட்டது.

    முகாமில் சிறந்த கிடாரிகளுக்கு பரிசு பொருள் மற்றும் சிறந்த கன்று வளர்த்த ஈஸ்வரன், துரைராஜ், ரத்தினம், பரமசிவம், சிதம்பரத்தாய், முத்து, வெள்ளத்துரை, கிருஷ்ணன் மற்றும் மாசானம் ஆகிய 9 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர் பிரிதிபா, வார்டு உறுப்பினர் இசக்கிபாண்டியன், ராஜகன்னி, முன்னாள் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×