என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- முகாமில் பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே . பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து ,சினை பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது. ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கப்பட்டது.
முகாமில் சிறந்த கிடாரிகளுக்கு பரிசு பொருள் மற்றும் சிறந்த கன்று வளர்த்த ஈஸ்வரன், துரைராஜ், ரத்தினம், பரமசிவம், சிதம்பரத்தாய், முத்து, வெள்ளத்துரை, கிருஷ்ணன் மற்றும் மாசானம் ஆகிய 9 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர் பிரிதிபா, வார்டு உறுப்பினர் இசக்கிபாண்டியன், ராஜகன்னி, முன்னாள் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்