அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி குலசை தசரா திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்- யூனியன் கூட்டத்தில் தலைவர் தகவல்

குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய காட்சி.
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி யூனியன் கவுன்சி லர்கள் கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜான்சிராணி முன்னிலை தாங்கினார். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோபோரின், முருகேஸ்வரி, ஜெயகமலா, தங்க லெட்சுமி மெல்சி ஷாலினி, ராமலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதலில் வரவு செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

முருகேஸ்வரி (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவை காண இந்தியா முழு வதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவி வார்கள். பக்தர்களின் வசதிக்காக குலசை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பக்தர்கள் அதிகளவு பயன்படுத்தும் குலசை வடக்கூர் ரோடு, காமராஜர்நகர் ரோடு, குலசை கடற்கரை ரோடு மற்றும் இணைப்பு ரோடுகள் அனைத்து ரோடுகளையும் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

முருங்கை மகாராஜா (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகில் தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. தசரா திருவிழாவின் போது சுவர் இடிந்து விழுந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்படும். எனவே ஆபத்தான சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

தசரா திருவிழாவின் போது பக்தர்கள் குலசை மெயின் ரோட்டில் இருந்து ரெத்தினமாகாளி அம்மன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவிலுக்கு செருப்பு அணியா மல் நடந்து வரு வார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக இதனை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேணடும்.

செல்வின் (கவுன்சிலர்): மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லை. எனவே டாக்டர் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

பாலசிங் (சேர்மன்): அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது. குலசே கரன்பட்டினத்தில் 3 முக்கியமான ரோடு போடப்பட்டுள்ளது. கல்லா மொழியில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்க உள்ளது. தசரா திருவிழாவிற்கு முன்பாக குலசையில் உள்ள அனைத்து ரோடுகளும் மரமாத்து செய்யப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்து பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com