search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குச்சனூர் : சனீஸ்வர பகவான் கோவிலில் ஜூலை 22-ல் ஆடி பெருந்திருவிழா - முன்னேற்பாடுகள் தீவிரம்
    X

    திருவிழாவை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    குச்சனூர் : சனீஸ்வர பகவான் கோவிலில் ஜூலை 22-ல் ஆடி பெருந்திருவிழா - முன்னேற்பாடுகள் தீவிரம்

    • குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.
    • திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டுக்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.

    முப்பெரும் தெய்வங்க ளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானு க்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்க ளுடன் காட்சி அளிக்கிறார்.

    இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளில் நடை பெறுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. முதல் சனி வார திருவிழாவன்று காலை 11 மணிக்கு கலிப்பணம் கலிக்கப்படும். பின்பு கோவில் வளாகத்தைச் சுற்றிலும் சுத்தநீர் தெளித்து வழிபாடு நடைபெறும்.

    பூலாந்தபுரம் ராஜ கம்பளத்தார் திருவிழா வுக்கான சகுனம் பார்ப்பர். அப்போது காகம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பறந்து செல்வது சுவாமி உத்தரவாக எடுத்துக் கொள்ளப் படும்.

    இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். அன்றும், ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆகஸ்ட் 4-ந்தேதி பகல் 12.30 மணிக்கு சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு சனிதோறும் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சள் காப்பு சாத்துப்படி, சுவாமி புறப்பாடு, ஆக.7-ம் தேதி மாலை 6 மணிக்கு லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆக.19-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடையும்.

    விழாவை முன்னிட்டு கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று நெரிசலின்றி வெளி யேறும் வகையில் தனிப்பா தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டு க்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    Next Story
    ×