பூ வியாபாரி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர்சுரேந்திர குமார் (வயது 33). பூ வியாபாரம் செய்து வந்தார். 

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சுரேந்திரகுமார் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்திரகுமார் இறந்தார்.

இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com