என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
- விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இணை பேராசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு பள்ளி, கல்லூரிகளின் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை மேலாளர் ராஜராஜன், இணை பேராசிரியர்கள் பீம்மராஜ், ரவி, கிருஷ்ணன், நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் படையப்பா மற்றும் அருண், சாகுல்அமீது உள்பட கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






