search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை தொடங்குகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2  பொதுத் தேர்வு
    X

    நாளை தொடங்குகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு

    • மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகளில் பயிலும் 10,167 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 118 பள்ளிகளில் பயிலும் 14,245 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 24,412 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 48, ஓசூரில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உள்ள மேஜைகள் மீது மாணவர்களின் பதிவு எண்ணை எழுதும் பணியில் ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவ, மாணவிகள் 36 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 12,272 மாணவ, மாணவிகள் 51 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×