search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்
    X

    நீலகிரியில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பரிகார தெய்வங்கள், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து தோரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட–த்தை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தைப்பூச திருவிழாவிற்கு வருகை தந்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரை நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலை வர் மோகன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    தைப்பூசத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் தேரோட்டத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதி–களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேர் திருவிழா நடக்கும். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை முதலே கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக முருகனை தரிசிக்க சக்திமலை முருகன் கோவிலுக்கு வந்த னர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து தைப்பூச தேர்திருவிழா காமாட்சி தாசர் சுவாமிகள் அவினாசி ஆதினம் முன்னிலையில் நடை– பெற்றது.இவ்விழாவில் கோவில் குருக்கள் பட்டி விநாயகம்,முருகேஷ், ஸ்ரீ சக்தி சேவா சங்கம் தலைவர் போஜராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் கொடி இறக்குதல், மஹா தீபாராதனை, மவுன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    அரவேணு காமராஜர் நகர் பாலமுருகன் கோவிலிலும் 108-க்கும் மேற்பட்ட பால் குடங்களும், காவடிகளும் எடுக்கப்பட்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    Next Story
    ×