கே.கே. நகரில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் பறிப்பு

2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே. நகரில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் பறிப்பு
Published on

சென்னை:

சென்னை, எம்.ஜி.ஆர் நகர், அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி செல்வி (50).அதே பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை அடமானம் வைத்திருந்த நகையை திரும்புவதற்காக கே.கே நகர் வேம்புலி அம்மன் கோவில் தெரு வழியாக ரூ.33 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com