

வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 24 வார்டு பகுதிகளுக்கும் புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் நேரில் சென்று, வார்டு கவுன்சிலர்கள், வார்டு கழக செயலாளர், கழக நிர்வாகிகளுக்கும், கழக மூத்த முன்னோடிகளுக்கும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர கழக அவை தலைவர் வாங்கிலி, மாவட்ட தொமுச தலைவர் அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நவாஸ்கான், நகர கழக பொருளாளர் கந்தசாமி, நகர கழக துணைச் செயலாளர் இம்ரான்கான், அனைத்து வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.