என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ
- பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ இளங்கோ
- பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வையாபுரிநகர் கிளை வங்கி சேமிப்பு கணக்கு சிறப்பு முகாமில் குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விற்பனையாளர் கௌசல்யா என்பவர் அதிக அளவிலான புதிய சேமிப்பு கணக்கு துவங்கியதைத் தொடர்ந்து பதிவாளர் அவர்களின் அறிவுரைப்படி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வீதம் 207 விண்ணப்பத்திற்கு ரூ.1035 ஊக்கத்தொகை மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கினார்.மேலும், இந்த முகாமில் மகளிருக்கு உடனுக்குடன் சேமிப்பு கணக்கு துவக்கிட விண்ணப்பம் அளித்து உடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டது.இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் அபிராமி , வங்கி துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






