என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
- மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், எஸ்.பி.சுந்தரவதனம் கலந்து கொண்டு பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், கடந்த 2021ல், 20 கொலை வழக்குகளும், 2022ல், 14 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021ல், 393 விபத்துகளில், 413 பேர் உயிரிழந்த நிலையில், 2022ல், 368 விபத்துகளில், 377 பேர் உயிரிழந்துள்ளனர்.
முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு வாகன சோதனை செய்து சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். மேலும், குற்ற செயல்களான சூதாட்டம், லாட்டரி, கஞ்சா, குட்கா, சட்ட விரோத மதுவிற்பனை ஆகியவற்றை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், ஏ.டி.எஸ். பி. கண்ணன், டி.எஸ்.பி.க்கள் தேவராஜ், முத்தமிழ் செல்வன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறை வாகனங்கள் முறையாக பரா மரிக்கப்படுகிறதா என எஸ்.பி., சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்